அவினாசியில் ஹரிபவனம் ஹோட்டலின் புதிய கிளை

ஹரிபவனம் ஹோட்டலின் புதிய 7-வது கிளை திருப்பூர் – அவினாசி ரோடு, சர்வீஸ் டிராக், தேசிய நெடுஞ்சாலையில், சுப்ரீம் விஸ்டா காம்ப்ளக்சில் நவீன வசதிகளுடன் வெள்ளிக்கிழமை அன்று திறக்கப்பட்டது.

இந்த புதிய கிளையினை ஹோட்டல் ஹரிபவனம் உரிமையாளர் பாலச்சந்தர் ராஜுவின் தாயார் ருக்மணி ராஜூ திறந்து வைத்தார். 50-வது ஆண்டு பொன் விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இங்கு நிறுவப்பட்டுள்ள ஹோட்டல் ஹரிபவனத்தின் நிறுவனர் ராஜுவின் திருவுருவச் சிலையினை அன்னபூர்ணா ஹோட்டல் இணை நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார்.

பூமராங் பிரத்தியேக ஐஸ் கிரீம் பார்லரை ஹரிபவனம் உரிமையாளர் பாலச்சந்தர் ராஜு திறந்து வைத்தார். தனிப்பட்ட டைனிங் ஹால் அறையினை நில உரிமையாளர் ஸ்ரீனிவாசன் திறந்து வைத்தார். இங்கு அமைந்துள்ள கஃபே-யினை மணி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.