ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்களின் சைக்கிள் பேரணி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி மற்றும் தூய்மைப் பணி நடைபெற்றது.

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு, சைக்கிள் பேரணி மற்றும் தூய்மைப் பணி நடந்தது.

இதில், 100 க்கும்  மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவர்கள் சைக்கிளில் பேரணியாகச் சென்று சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதன் பின், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் கல்லூரி வளாகம், விடுதி வளாகம் ஆகிய இடங்களில் தூய்மைப் பணி மேற்கொண்டனர்.

இந்த பேரணியை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை தலைமை நிர்வாக அலுவலர் ராம்குமார் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் சிவக்குமார், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பிரகதீஸ்வரன், நாகராஜன், சுபாஷினி, தீபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.