நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், அவரின் ஆட்சி குறித்தும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் அவ்வப்போது விமர்சித்தும், குற்றம் சாட்டியும் வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியின் நிர்வாக திறமையற்ற ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் அடியோடு சீர்குலைந்துவிட்டதாக ராகுல்காந்தி திங்கட்கிழமை அன்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மோடி ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு, வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு அதிகரித்து பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்ததை, அழிப்பது எப்படி என்பதற்கு ஒரு ஆய்வாக பிரதமர் நரேந்திர மோடியின் 8 ஆண்டுகால தவறான நிர்வாகம் உள்ளது என்று சாடியுள்ளார்.