ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில மாணவர் மாநாடு

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜுகேசன் அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் 9 வது மாநில மாணவர் மாநாடு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இம்மாநாட்டில் கல்லூரி முதல்வர் உமா வரவேற்புரையாற்றினார். எஸ் என்.ஆர் சன்ஸ் கல்வி நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் சிறப்புரையாற்றினார். இந்தியன் சொசைட்டி பார் டெக்னிக்கல் எஜுகேசன் அமைப்பின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் சங்கரசுப்ரமணியன் தலைமையுரையாற்றினார்.

அவர் பேசும்போது ISTE அமைப்பானது தொழில்நுட்ப மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்றல் மற்றும் கற்பித்தலை மேம்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட அமைப்பாகும். இவ்வமைப்பின் மூலம் பல்வேறு தொழிநுட்ப நிகழ்வுகள் நடைபெறுகிறது. மாணவர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

மாநாட்டின் நிகழ்வுகளை பற்றி ISTE அமைப்பின் கல்லூரி பொறுப்பாளரும் எலெக்ட்ரானிக்ஸ் துறை தலைவருமான வனிதா விளக்கி கூறினார்.

சிறப்பு விருந்தினராக கோவை, இண்டோசெல் நிறுவனத்தின் ஜூனியர் வைஸ் பிரசிடென்ட் சரவணன் கலந்துகொண்டு மாணவர்களிடையே பேசினார். அவர் பேசும்போது, மாணவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவினை சரியான வழியில் பயன்படுத்த வேண்டும் கற்பதில் தெளிவுடன், புரிந்து படிக்க வேண்டும், தினமும் ஏதாவது ஒன்றை கற்று கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைபாளர்களாக கலந்துகொண்ட ISTE அமைப்பின் செயற்குழு உறுப்பினர்கள் ஊட்டி சி.எஸ்.ஐ.பொறியியல் கல்லூரி முதல்வர் ஜோஸ்வா ஞானசேகரன் மற்றும் கே.எஸ்.ஆர் தொழில்நுட்ப கல்லுரி பேராசிரியர் செல்வகுமார் கந்தசாமி ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.

பின்னர் நடை பெற்ற நிகழ்வில் 2021 ஆம் ஆண்டின் சிறந்த ISTE மாணவர் விருது மாநில அளவில் தேர்வு பெற்ற 20 பாலிடெக்னிக் கல்லுரிகளை சார்ந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் இக்கல்லூரியை சார்ந்த இயந்திரவியல் துறை மூன்றாமாண்டு மாணவர் ராஜா ஆனந்த் தேர்வு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இதனை தொடர்ந்து இவ்வமைப்பின் மாநில அளவிலான சிறந்த ப்ராஜெக்ட் விருது மூன்று பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும், ஸ்ரீனிவாச ராமானுஜ கணித விருது நான்கு கல்லூரிகளை சார்ந்த மாணவர்களுக்கும், இப்போட்டியில் அதிக எண்ணிகையிலான மாணவர்கள் கலந்து கொண்டதற்காக மூன்று கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன

நிறைவு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை, பிரிக்கால் நிறுவனத்தின் முதன்மை தொழிலநுட்ப அதிகாரி கனகராஜ் கலந்துகொண்டு வினாடி-வினா, ப்ராஜெக்ட் தயாரிப்பு மற்றும் பவர் பாயின்ட் பிரசன்டேசன் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினார்.