அரசு பணியாளர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அறிவிப்பு

அம்மா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில்

கோவை நல்லறம் அறக்கட்டளை அம்மா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் IV மற்றும் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் உதவி ஆய்வாளர் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வரும் 20-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன என்று அறக்கட்டளையின் நிறுவனரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி சனிக்கிழமை தெரிவித்தார்.

இந்த இலவச பயிற்சிகளின் துவக்க விழா வரும் புதன் (20.4.22) அன்று ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அம்மா ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது.

“இந்த இலவச பயிற்சி வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் இளைஞர்கள் இந்த அரிய நல்வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் அரசுப் பணி கனவை நனவாக்கிக் கொண்டு வாழ்வில் உயர வாழ்த்துகிறேன்”, என்று அவர் தெரிவித்தார்.