திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி சார்பாக, தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு செவ்வாய்ககிழமை அன்று பீளமேடுபுதூர் அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

சுமார் 100 குழந்தைகளுக்கு விளையாட்டுப் பொருட்கள், சில்வர் தட்டுகள், டம்ளர், தரையில் விரிக்கும் பாய்கள் மற்றும் பல்வேறு வகையான நலத்திட்ட உதவிகளை, கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் மற்றும் கோவை மாநகராட்சி 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர், கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக் வழங்கினர்.

கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறியாளர் அணி அமைப்பாளர் நா. பாபு தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பீளமேடு பகுதிக்கழகப் பொறுப்பாளர்கள் வே. பாலசுப்பிரமணியம், மா.நாகராஜ், பொறியாளர் அணி enr. ஞானவேல், வசந்தகுமார், ராஜேஷ், மில் ரவி, ரியாஸ், வட்டக்கழகப் பொறுப்பாளர்கள் மா. ரவி, தகடூர் செல்வம், நாராயணன், சுந்தர்ராஜ், கோவிந்தராஜ், காந்திமதி, ஆர்.செல்வராஜ், சின்னமணி, சி.எஸ்.முருகேஷ், அக்ரிபாலு, இலக்கிய அணி சீமான் சுந்தரம், ஆவை சதீஷ், ஜெ.எஸ்.ஆர். ஜெயபால், கார்த்திக் வெங்கடேஷ், IT wing ஸ்ரீ ராம், முத்துப்பாண்டி, சக்திவேல், காந்திமதி, விஜயா, சிவகாமி, விஜயலட்சுமி, மலர், சரஸ்வதி, பிரியா, கழக நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பொதுமக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.