திமுக சார்பில் இ.எஸ்.ஐ மருத்துவமனை முன் நீர் மோர் பந்தல்

கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனை முன்பு கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.

முதல்வர் ஆணைக்கு இணங்க, பொதுமக்கள் தாகம் தீர்க்க பல்வேறு பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்மோர் பந்தல்களில் இளநீர், தர்பூசணி ஆகியவையும் கொடுக்கப்படுகிறது.

மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ் செல்வி கார்த்திக், கழக நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.