இரத்தினம் கல்லூரியில் பாலின சமத்துவ செல் கருத்தரங்கு

இரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறையும் ஜெண்டர் ஈகுவிட்டி செல் (Gender Equity Cell) இணைந்து கல்லூரியில் பெண்கள் உரிமைகளின் அதிகாரம் பெற்ற சட்டங்கள் என்னும் பொருண்மையில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் வணிகவியல் துறைத்தலைவர் ஹேமலதா கலந்துகொண்டு வரவேற்புரை வழங்கினார். சிறப்பு விருந்தினாராக வழக்கறிஞர் சுகன்யா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வணிகவியல் துறைப்பேராசிரியர்களும் 76 மாணவிகளும் பயனடைந்தனர்.