கே.பி.ஆர் கல்லூரி நடத்திய விழிப்புணர்வு: அமைச்சர் பாராட்டு

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சாலை பாதுகாப்புப் குறித்து விழிப்புணர்வினை நடத்தினர். இதனை வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பாராட்டியுள்ளார்.

கே.பி.ஆர் கல்லூரி, உயிர் கிளப், யுவா கிளப் மற்றும் ரோட்ராக்ட் கிளப் இணைந்து நடத்திய ”சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி” நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கிளப் உறுப்பினர்கள் கலந்துகொண்டு சாலை பாதுகாப்புப் குறித்துப் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.

பொதுமக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவத்தைக் குறித்து மாணவர்கள் எடுத்துரைத்தனர். விபத்து ஏற்படும்போது பொதுமக்கள் நடந்துகொள்ளும் முறையினை விளக்கினர். அப்போது அந்த வழியாக வந்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மாணவர்களின் இந்த விழிப்புணர்வு நிகழ்வினை பாராட்டினார்.

இந்நிகழ்வில் கல்லூரி மாணவர்கள் 50 பேர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கினர்.