மக்களின் குறைகளைக் கேட்டறிந்த நா.கார்த்திக்

கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக், பீளமேடு புதூர் பகுதியில் வசிக்கும் மக்களை சந்தித்து, அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

அப்பகுதியில் நிலவும் ஆழ்குழாய்க் கிணற்றுநீர் பற்றாக்குறை, குடிநீர் விநியோகத்தை சீரமைத்தல், முதியோர் உதவித்தொகை வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அவர் கேட்டறிந்தார்.

சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்ததாகவும் கூறினார்.

மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினர் புதூர் மணிகண்டன், பீளமேடு பகுதிக்கழகம்-1 பொறுப்பாளர் வே. பாலசுப்பிரமணியம், 52 வது வார்டு AE ஃபெர்மான் அலி, புதூர் நாராயணன், சுந்தர்ராஜ், கோவிந்தராஜ், காந்திமதி, விஜயா, சுசீலா, கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.