ரங்கராமர் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா

கோவை மாவட்டம் மதுக்கரை வழுக்குப்பாறை கிராமத்தில் உள்ள அருள்மிகு ரங்கராமர் திருக்கோயிலில் திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது.

தென்சேரிமலை ஆதீனம் தவத்திரு முத்துசிவராமசாமி அடிகளார், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் சன்னதி 24 வது பட்டம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகளும் விமான கலசத்திற்குப் புனித நீராட்டித் திருக்குட நன்னீராட்டை நடத்தி வைத்தனர்.

பதிமூன்று ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இத்திருக்குட நன்னீராட்டு விழாவை அருள்மிகு ரங்கராமர் திருக்கோயிலின் தலைவரும், கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியின் செயலர் மற்றும் இயக்குநருமான வாசுகி, பொருளாளர் மருத்துவர் பரமசிவன் ஆகியோர் திருக்குட நன்னீராட்டு விழாவை முன்னின்று நடத்தினர். இவ்விழாவில் ஊர்ப் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.