சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு தொழில் வித்தகர் விருது

கோவை சுழற்சங்கங்கள் சார்பில் தொழில் வித்தகர் விருது ( Vocational Excellence Award) தமிழ்செம்மல், சிந்தனைக்கவிஞர் கவிதாசன் அவர்களுக்கு. இன்று  (16.06.2018) கிக்கானி பள்ளி, சரோஜினி நடராஜ் கலையரங்கத்தில் நடைபெற்ற விழாவில் கோவை ரூட்ஸ் நிறுவனங்களின்  இயக்குநராகவும், மனித வள மேம்பாட்டுத்துறை தலைவராகவும் உள்ள கவிதாசன் அவர்கள் கடந்த 30 ஆண்டுகளாக மனிதவள மேம்பாட்டுத்துறையில் புரிந்து வருகின்ற சாதனைகளுக்காகவும், தனிமனித முன்னேற்றத்திற்காக செயல்படுத்தியுள்ள  பல்வேறு ஆக்கபூர்வமான திட்டங்களுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், தலைமை விருந்தினராக கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவர்  A.பாரி  IPS அவர்கள் கலந்து கொண்டு தலைமையுரை ஆற்றினார் . கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனங்களின் தலைவர் K.ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை வழங்கினார். மாவட்ட தொழில் சேவை இயக்குனர்  Rtn.PP.MD.ADV. N. சுந்தரவடிவேலு  அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

கவிதாசன் அவர்கள் இந்த பெருமைக்குரிய விருதினை ரூட்ஸ் குடும்பத்தின் அனைத்து பணியாளர்களுக்கும் சமர்ப்பிப்பதாக  அறிவித்துள்ளார்.

ரோட்டரி சங்க தலைவர்  Rtn.MPHF. சான்டியாகோ ஜேசு அவர்களும், திட்ட தலைவர் Rtn.PHF.Dr. சித்ரா மனோகர் அவர்களும், செயலர் Rtn.ஜ்யோதிஷ் N.பிள்ளை அவர்களும், தொழில் சேவை இயக்குனர் Rtn.PHF.Dr.N.மகேந்திரன் அவர்களும் இந்த நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.