வி.எல்.பி கல்லூரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

கோவைப்புதூர் வி.எல்.பி ஜானகி அம்மாள் கலை அறிவியல் கல்லூரி வளாக மாணவர் நலக்குழு மற்றும் சமூக சேவை மன்றம் இணைந்து இலவச கண் பரிசோதனை முகாமைக் கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

மூன்று கண் மருத்துவர் கொண்ட குழுவுடன் இந்த முகாம் தனது சேவையை தொடங்கியது. கண்களைப் பரிசோதிக்க தேவையான அனைத்து கருவிகளுடன் முகாம் அமைக்கப்பட்டிருந்தது. ஏறத்தாழ 270 பயனாளிகளைப் பரிசோதித்தனர். சிலர் மேற்கொண்டு சிகிச்சைக்காகவும் பரிந்துரைக்கப்பட்டனர்.