நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு – கோவில் பூசாரிகள் நலச் சங்கம்

வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பதாக சேலத்தை தலைமை இடமாகக் கொண்ட கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் 18ம் ஆண்டு துவக்க விழாவை பற்றிய ஆலோசனை கூட்டமும், மாநில நிர்வாக குழு ஆலோசனைக் கூட்டமும் சேலம் மாநில தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு மாநில செயலாளர் சங்கர் முன்னிலை வகித்தார், கோவில் பூசாரிகள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் வாசு பூசாரி தலைமை வகித்து உரையாற்றினார். மற்றும் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெறச் செய்ய இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களை ஆதரித்து வெற்றிபெற தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வசிக்கும் பூசாரிகள் குடும்பத்தோடு வாக்களிக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.