நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் செயலர் மற்றும் முதன்மை கல்வி அதிகாரி கிருஷ்ணகுமார் மற்றும் கல்லூரி முதல்வர் அனிருதன் ஆகியோரின் தலைமையில் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
விழாவில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மஹிளா நீதிமன்றத்தின் நீதிபதி கார்த்திகேயன் கலந்து கொண்டு மாணவர் தன்னம்பிக்கை வளர்த்து கொள்ள முயற்சி செய்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும், மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சாதனை செய்ய வேண்டும் என்று பேசினார்.