சி.எம்.ஏ தேர்வில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியின் 8 மாணவர்கள் தேர்ச்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 8 மாணவர்கள் சி.எம்.ஏ பவுண்டேசன் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்திய செலவு மற்றும் கணக்காளர் நிறுவனம் (ஐ.சி.ஏ.ஐ) கடந்த ஜனவரி 2 ம் தேதி சி.எம்.ஏ பவுண்டேசன் தேர்வை நாடு முழுவதும் நடத்தியது. அதன் முடிவுகள் ஜனவரி 18 அன்று வெளியானது.

இத்தேர்வை எழுதிய ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் பி.காம். சி.எம்.ஏ துறை முதலாமாண்டு மாணவ, மாணவிகள் 8 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன்படி யாகேஷ் வர்மா, நந்தா, ராஜஸ்ரீ , யுவன்ராஜ், சுரேந்திரன், சினேகா, ஜெயசூர்யா, அனிந்திக் ஆகியோர் சி.எம்.ஏ பவுண்டேசன் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் முதல்வர் சிவக்குமார், பி.காம். சி.எம்.ஏ துறை தலைவர் சசிகலாதேவி மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.