தமிழகரசு நடத்திய குறளோவியம் போட்டியில் வேலம்மாள் மாணவர் இரண்டாமிடம்

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து மாநில அளவில் குறளோவியம் – ஓவியப் போட்டி நடத்தியது.

இப்போட்டியில் ஆலப்பாக்கம் வேலம்மாள் வித்யாலயா பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவன் கீர்த்திவாசன் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.

மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற இந்தத் திருக்குறள் ஓவியப் போட்டி கடந்த 21 முதல் 31 ஆம் தேதி வரை நடத்தப்பட்டது.

இதனையொட்டி, சமீபத்தில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெற்றி பெற்ற மாணவருக்கு ரூ. 30,000 வழங்கிப் பாராட்டினார்.