இந்தியாவில் 4 ஆயிரத்தை கடந்த ஒமைக்ரான் பாதிப்பு

இந்தியாவில் புதிதாக ஒரு லட்சத்து 759 ஆயிரத்து 723 பேர் கொரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர் என்றும், ஒமைக்ரான் பரவலின் எண்ணிக்கையும் 4,033 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பது:

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக ஒரு லட்சத்து 759 ஆயிரத்து 723 பேர் கொரோனாவில் பாதி்க்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 57 லட்சத்து 7 ஆயிரத்து 727ஆக அதிகரி்த்துள்ளது. கடந்த 227 நாட்களுகுப்பின் ஒரேநாளில் 1.79 லட்சம்பேர் கரோனாவில் பாதிக்கப்படுவது இதுதான் முதல்முறை.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் கடந்த 197 நாட்களில் இல்லாத அளவாக 7 லட்சத்து 23 ஆயிரத்து 619 ஆக அதிகரித்து 2.03 சதவீதமாக உயர்ந்துவிட்டது. கடந்த 227 நாட்களில் சிகிச்சைப் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்தது இதுதான் முதல்முறையாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவில் 146 பேர் உயிரிழந்தனர், இதன் மூலம் ஒட்டுமொத்த உயிரிழப்பு 4 லட்சத்து 83 ஆயிரத்து 936 ஆகஅதிகரித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் பரவலின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது, ஒட்டுமொத்த பாதிப்பு 4,033 ஆக அதிகரித்துள்ளது. இதில் 1,552 பேர் குணமடைந்துவிட்டனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 1,216 பேரும், டெல்லியில் 513 பேரும், கர்நாடகாவில் 441 பேரும், ராஜஸ்தானில் 529 பேரும், கேரளாவில் 333 பேரும், குஜராத்தில் 236 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.