கோவாக்ஸின் 3வது டோஸ் நல்ல முடிவைக் கொடுத்துள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல்

பூஸ்டர் டோஸ் எனப்படும் 3வது டோஸ் தடுப்பூசி போடும் திட்டம் இன்று முதல் இந்தியாவில் தொடங்குகிறது. இந்த நிலையில் கோவாக்ஸின் 3வது டோஸ் நல்ல விளைவுகளைக் கொடுத்துள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐசிஎம்ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “கோவாக்ஸின் 3வது டோஸ் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதைப் போட்டபின்னர் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது சோதனையில் தெரிய வந்தது. மேலும் சார்ஸ் கோவிட் வைரஸின் 2 வேரியன்ட்டுகளுக்கு எதிராக இது தீவிரமாக செயல்படுவதையும் அறிய முடிந்தது. இதன் மூலம் தீவிரமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது”.

ஜனவரி 3ம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. முன்களப் பணியாளர்கள் மற்றும் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு இந்த பூஸ்டர் தடுப்பூசி முன்னெச்சரிக்கை தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கியுள்ளது.