புத்தாண்டை ஆன்மிக ஒளியுடன் வரவேற்கும் வகையில், கோவை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்தும் ஆன்மீக உற்சவமான “எப்போ வருவாரோ” – 2022 நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் நிகழ்வு கிக்கானிக் பள்ளியில் திங்கட்கிழமை நடைபெற்றது.
10 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் நாள் அமர்வில் கிருஷ்ணா கலந்து கொண்டு ஶ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் பற்றி உரையாடினார்.
அதற்கு முன்னர் தன்னலமற்ற சேவை செய்கின்றவர்களை ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கௌரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் மூன்றாம் நாள் நிகழ்வில் முத்து நடராஜன் என்பவருக்கு “அருள் வளர்செம்மல்” என்ற விருது வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.