தடகளப் போட்டியில் இரண்டாமிடம் பெற்ற ஆர்.வி. கல்லூரி

கோவையில், மாவட்ட தடகள சங்கம் சார்பில் ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் – 2021 மற்றும் மயில்சாமி அவர்களின் 5- ஆவது நினைவுக் கோப்பைக்கான தடகளப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இப்போட்டியில் டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு கணினி அறிவியல் துறையில் பயிலும் மாணவன் சூர்யபிரகாஷ் 2.55 மீட்டர் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றார்.

வெற்றிபெற்ற மாணவனை கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன், கல்லூரி முதல்வர் ரூபா மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன் செய்திருந்தார்.