கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியில் தடுப்பூசி முகாம்

கே.பி.ஆர் பொறியியல் கல்லூரியின் தன்னார்வலர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு COVID-19 பரவுவதைக் கட்டுப்படுத்த கே.பி.ஆர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி அண்மையில் நடைபெற்றது. இதில் 600 உறுப்பினர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியை கே.பி.ஆர் குழுமங்களின் தலைவர் கே.பி. ராமசாமி, அவர்களின் வழிகாட்டுதலில் கே.பி.ஆர் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜியின் முதல்வர் அகிலா, தலைமை நிர்வாக அதிகாரி நடராஜன், ஆகியோர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர்.