கோவையில் பெய்த தொடர் மழையால் நிரம்பிய குளங்கள்

கோவையில் பெய்து வரும் தொடர்மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள் நிரம்பியுள்ளன. தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நொய்யல் ஆறு வழித்தடத்தில், கோவை மாவட்டத்தில், 25 குளங்கள் உள்ளன. அதில் 22 குளங்களில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அதன் விவரம்: உக்குளம், புதுக்குளம், கோளராம்பதி, நரசாம்பதி, கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, முத்தண்ணன் குளம், செல்வசிந்தாமணி, கங்கநாராயண் சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, குனியமுத்துார் செங்குளம், உக்கடம் பெரிய குளம், வாலாங்குளம், குறிச்சி குளம், வெள்ளலுார் குளம், சிங்காநல்லுார் குளம், ஒட்டர்பாளையம் குளம், கண்ணம்பாளையம் குளம், இருகூர் குளம், சூலுார் பெரிய குளம், சூலுார் சின்ன குளம், செம்மாண்டம்பாளையம் குளம்.

பேரூர் பெரிய குளத்தில், 95 சதவீதமும், நீலாம்பூர் குளத்தில், 80 சதவீதம், குனியமுத்துார் சின்ன குளத்தில், 20 சதவீதம் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. அதனால், குனியமுத்துார் சின்ன குளத்தில் தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.