புதுபிக்கப்பட்ட நீச்சல் குளம் திறப்பு விழா

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 24வது வார்டு, காந்தி பூங்காவில் மாநகராட்சி பொது நிதியிலிருந்து ரூ.187.1 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட நீச்சல் குளத்தை, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குத்துவிளக்கேற்றி திறந்து வைக்கிறார் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. உடன், மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்.