அடுக்குமாடி வீடுகள் கட்டும் பணி துவக்கம்

கோவை மாநகராட்சியும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் மூலம் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ், செல்வபுரம், கல்லாமேடு, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் 305 அடுக்கு மாடிவீடுகள் ரூ.26.99 கோடி மதிப்பில் குடியிருப்புகள் கட்டும் பணிகளை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமி பூஜையுடன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு வீடுகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார். உடன், மாவட்ட ஆட்சித் தலைவர் த.ந.ஹரிஹரன், மாநகராட்சி ஆணையாளர் மரு.க.விஜயகார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள்.