தல தீபாவளி கொண்டாட இருக்கும் காவலர்களுக்கு 5 நாட்கள் விடுப்பு

கோவை மாவட்டம் கோவைபுதூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4ஆம் அணி செயல்பட்டு வருகிறது. இதன் கமெண்டண்ட், அந்த நிலையத்தின் அனைத்து காவலர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், கோவைபுதூரில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 4 ஆம் அணியின் அனைத்து குழுமங்களிலும் பணிபுரியும் காவலர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள் சொன்னதுடன், தல தீபாவளி கொண்டாட இருக்கும் காவலர்களுக்கு நவம்பர் 3ம் தேதி முதல் 07ஆம் தேதி வரை 5 நாட்கள் விடுப்பு கொடுத்து அனுப்பவும், மேலும் தீபாவளி அன்பளிப்பாக ரூபாய் 200 மதிப்புள்ள பட்டாசுகளும், ரூபாய் 100 மதிப்புள்ள இனிப்பும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அன்பளிப்பை அந்தந்த குழும அலுவலகத்தில் அல்லது தலைமை அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.