தொடர் மழை காரணமாக நிரம்பி வழியும் தடுப்பணைகள்

மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக கோவையில் உள்ள தடுப்பணைகள் நிரம்பி வழிந்தது.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவித்த நிலையில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் பெய்த மழையால் கோவை பேரூர் நொய்யலாறு வழியாக புட்டிவிக்கி பாலத்தை கடந்து ஆத்துப்பாலம் அருகில் உள்ள காளவாய் தடுப்பணை நிறைந்தது. மேலும் இந்த அணை பராமரிப்பு இல்லாமல் இருந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் நொய்யல் ஆற்றை தூர்வாறும் திட்டத்தை தன்னார்வ அமைப்புகளுடன் கைகோர்த்து நீர் வழித்தடங்கள் புனரமைக்கப்பட்டது.

அதன் விலைவாக தற்பொழுது காளவாய் தடுப்பணை நிறைந்து வழிந்து ஆத்துப்பாலம் வழியாக வழிந்தோடுகிறது. மேலும் ராஜவாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு சிறந்தமுறையில் பராமரிக்கபட்டுள்ளதால் இந்த தடுப்பணையில் இருந்து குறிச்சி குளத்திற்கு தண்ணீர் திறந்து வைத்து மழைநீரை வீணடிக்காமல் சேமித்து வைக்க முடியும். மேலும் இதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.