அப்துல்கலாமின் பிறந்த நாளை கொண்டாடிய சிறுவர்கள்!

அப்துல்கலாமின் 90வது பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடிய சிறுவர், சிறுமியர்

கோவை: டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு டாக்டர் அப்துல்கலாம் நற்பணி அறக்கட்டளை சார்பில் கேக் வெட்டுதல் மற்றும் அன்னதான நிகழ்ச்சி ஆகியவை ஆவாரம்பாளையம் பகுதியில் இன்று காலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு நிறுவனத் தலைவர் ரங்கநாதன் தலைமை வகித்தார். செயலாளர் முனுசாமி, கவுர ஆலோசகர் மணிவண்ணன், கலைமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துல்கலாமின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து சிறுவர், சிறுமியர் கேக் வெட்டி கொண்டாடினர். தொடர்ந்து 100க்கும் மேற்பட்டோருக்கு அன்னதான நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சி குறித்து நிறுவனத் தலைவர் ரங்கநாதன் கூறுகையில், அப்துல்கலாம் நற்பணி அறக்கட்டளை சார்பில் மரம் நடுதல், வசதியற்ற ஏழை மாணவர்களுக்கு படிப்பதற்கான உதவிகளை வழங்குதல், கொரோனா காலகட்டத்தின் போது ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல், வசதியற்ற ஊருக்கு இறுதி சடங்குகளை செய்ய உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்து வருகிறோம் என்றார்.