ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர் இந்திய விமானப்படை அதிகாரியாக தேர்வு

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் அருண் கடந்த ஜூன் மாதம் தகவல் தொழில்நுட்பத் துறையில் பட்டம் பெற்றார்.

கல்லூரி தேசிய மாணவர் படையைச் சேர்ந்த இவர் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பரில் நடைபெற்ற இந்திய ராணுவம் மற்றும் விமானப்படைக்கு அதிகாரி பதவிக்கு சேர்வதற்கான இறுதிச்சுற்றில் பங்கு கொண்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது பணியில் சேர்வதற்கான நியமன ஆவணத்தை இந்திய அரசிடம் பெற்றுக்கொண்டார்.

மேலும் அவர் பொறியியல் படிப்பு படிக்கும் போது தேசிய மாணவர் படையில் பல்வேறு தேசிய அளவில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார். லெப்டினன்ட் அருண் புரிந்த சாதனையை எஸ். என் .ஆர் சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி கல்லூரி முதல்வர் அலமேலு, துணை முதல்வர் கருப்புசாமி மற்றும் என்.சி.சி அதிகாரி லெப்டினன்ட் ரமேஷ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை தலைவர் செந்தமிழ் செல்வி ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கி கௌரவித்தனர்.