இரத்ததான முகாமை தொடங்கி வைத்த அமைச்சர் கயல்விழி

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகத்தில் நடைபெற்ற இரத்ததான முகாமில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு (26.09.2021) தொடக்கி வைத்தார்

தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறும்போது:

வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40% இடம் உள்ளது. வரும் நாட்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவித்த அவர் ஆதிதிராவிட கட்டடங்களை நாங்கள் ஆய்வு செய்தோம் பல கட்டிடங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுற்றுச்சுவர் இல்லாமலும் இருக்கிறது இதனால் அதற்கு 25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிட மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் பொருத்தவரை அவரவர்கள் வங்கிக் கணக்கில் தான் செலுத்தப்படுகிறது கிடைக்காத பட்சத்தில் உடனடியாக தகவல் தெரிவித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் இன்று தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் 15 லட்சம் தடுப்பூசிகள் போடப்படுகிறது. மத்திய அரசு தடுப்பூசிகளை அதிகமாக தர வேண்டுமெனக் கோரிக்கை வைத்தார்.