பெரியார் பிறந்த நாள்: பல்வேறு அமைப்புகள் பெரியார் சிலைக்கு மரியாதை

பெரியார் பிறந்த தினத்தை முன்னிட்டு கோவையில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெரியார் பிறந்த செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்தார்

தமிழகத்தில் சமூக நீதிக்கு வித்திட்டவர்களுள் முக்கியமானவர் பெரியார். அவரது 143வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பெரியார் பிறந்தநாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.

இந்நாளில் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவையில் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், திமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.