எஸ்.எம்.டி.ஏலச்சீட்டு நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு

மாதந்திர ஏலச்சீட்டு நிறுவனமான எஸ்.எம்.டி.ஏலச்சீட்டு நிறுவனம் தனது புதிய அலுவலக கிளை கட்டிடத்தை கோவை சிவானந்தாகாலனியில் துவக்கியது.

இந்நிறுவனம் 33 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு நிறுவனத்தின் புதிய கிளை அலுவலக திறப்பு விழா சிவானந்தா காலனி பகுதியில் நடைபெற்றது. எஸ்.எம்.டிநிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் கல்யாண சுந்தரம், மற்றும் இயக்குனர் கவிதா கல்யாண சுந்தரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் செந்தில் குழும நிறுவனங்களின் தலைவர் ஒ.ஆறுமுகசாமி மற்றும் அனன்யா குழுமங்களின் தலைவர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய தலைமை அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.

தொடர்ந்து உமா மகேஸ்வரி யுவராஜ் குத்து விளக்கேற்றினார். எஸ்.எம்.டி.நிறுவனம் குறித்து அதன் நிர்வாக இயக்குனர் கல்யாண சுந்தரம் கூறுகையில்: ஒரு லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை சீட்டு நடத்தும் இந்நிறுவனம் வாடிக்கையாளர்களின் நல் ஆதரவோடு 32 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. வியாபாரிகள், இல்லத்தரசிகள், அரசு மற்றும் தனயார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் எங்களது நிறுவனம் ஏலச்சீட்டு நடத்தி வருகிறது.

மேலும் கல்வி, தொழில் முதலீடு, மருத்துவம் உள்ளிட்ட சேமிப்பு மற்றும் கடன் வசதி போன்ற மக்களின் பொருளாதார தேவைக்கு எங்களது சீட்டு நிறுவனம் துணை நிற்கும். இதனால் வாடிக்கையாளர்கள் இராசியான மாதந்திர ஏலச்சீட்டு நிறுவனம் என்ற சிறப்பு பெயரை எங்களது நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.