என்.ஜி.பி கல்லூரியில் சுதந்திர தின விழா

கோவை காளப்பட்டி சாலையில் அமைந்துள்ள டாக்டர் என்.ஜி.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று 75-வது சுதந்திர தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை மெடிக்கல் சென்டர் ரிசர்ச் & எஜுகேஷனல் டிரஸ்ட் – ன் அறங்காவலர் அருண் பழனிசாமி கொடியேற்றி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் டாக்டர் என்.ஜி.பி தொழில்நுட்ப கல்லூரியின் செயலர் தவமணி பழனிசாமி, தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் பிரபா, கலை கல்லூரி முதல்வர் ராமசாமி, என்.ஜி.பி காலேஜ் ஆப் எஜுகேஷனின் முதல்வர் ராமசாமி ஆகியோர் கலந்துகொண்டனர்.