இரத்தினம் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இரத்தினம் கல்லூரியில் கோவையைச் சேர்ந்த அக்னி டெக், ஈரோட்டை சேர்ந்த தி கிரியேட்டர் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனமும், இரத்தினம் கல்வி குழுமமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டனர் மற்றும் வடிவமைப்பு கலை கழகம் தொடக்கவிழாவும் (29.07.2021) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அக்னி டெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் செந்தில்திபன், தி கிரியேட்டர் இன்டஸ்ட்ரீஸ் பிரபு மற்றும் இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் ஆ.செந்தில் ஆகியோர் தலைமை தாங்கினார்.

இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி நித்தியானந்தம், இரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தின் முதல்வர் நாகராஜ், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதன்மை நிர்வாக அதிகாரி மாணிக்கம், இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முரளிதரன் முன்னிலை வகித்தனர்.