தலைமை செயலகத்தில் வண்ண விளக்குகளால் ஒளிரும் ‘தமிழ் வாழ்க’!

சென்னையில் ரிப்பன் மாளிகையை தொடர்ந்து தலைமை செயலகத்திலும் தமிழ் வாழ்க எனும் பெயர்ப்பலகை வண்ண அலங்காரத்துடன் வைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி அலுவலக கட்டடத்தின் மீது இருந்த ‘தமிழ் வாழ்க’ பெயர் பலகை அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்டது. பிரதமர் மோடி பிரச்சாரத்திற்காக தமிழகம் வந்தபோது பாதுகாப்பு காரணங்களுக்காக பலகை அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமுக ஆட்சிக்குவந்த பின் கடந்த ஜூன் 3ம் தேதி, சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகை கட்டடத்தில் தமிழ் மொழியின் சிறப்பை பறைசாற்றும் விதமாக ‘தமிழ் வாழ்க’ எனும் பெயர் பலகை நிறுவப்பட்டது.

இதேபோல் அரசு தலைமைச் செயலகத்திலும் வண்ண விளக்குகளுடன் ‘தமிழ் வாழ்க’ என்ற பதாகை மீண்டும் வைக்கப்பட்டு ஒளிர்ந்து வருகிறது.