கே.பி.ஆர் தொழில்நுட்ப கல்லூரி – ரூட்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை அரசூரில் அமைந்துள்ள கே.பி.ஆர் தொழில்நுட்ப கல்லூரியில் இன்று ரூட்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் சிந்தனை கவிஞர் கவிதாசன், கே.பி.ஆர் தொழில்நுட்ப கல்லூரியின் தலைமை நிர்வாகி எ.எம்.நடராஜன், கல்லூரி முதல்வர் அகிலா, ரூட்ஸ் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் மேலாண்மையின் துணை பொது மேலாளர் சம்பத்குமார், கே.பி.ஆர் கலை கல்லூரியின் முதல்வர் பாலுசாமி, மற்றும் மெக்கானிகல் துறை தலைவர் ரமேஷ் பாபு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் சிந்தனை கவிஞர் கவிதாசன் மற்றும் கல்லூரி முதல்வர் அகிலா புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பரிமாற்றிக்கொண்டனர்.