பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் ‘மொபைல் ஆக்சிஜன்’

கொரோனா தொற்றால் பாதிக்கபட்டு மூச்சுவிடுவதில் சிரமப்படும் நோயாளிகளுக்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி சார்பில் கோவையில் மொபைல் ஆக்சிஜன் சேவை துவங்கப்பட்டுள்ளது.

கொரானா தொற்றின், இரண்டாம் அலை மிகப்பெரிய தாக்கத்தை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்திய நிலையில் அதன் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில், மொபைல் ஆக்சிஜன் சர்வீஸ் துவங்கப்பட்டுள்ளது.

உக்கடம் கோட்டைமேடு பகுதியில் இருசக்கர வாகன ஆக்சிஜன் சர்வீஸ் துவங்கப்பட்டுள்ளது. இதனை பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இஸ்மாயில் துவங்கிவைத்து, வாகனத்தை வழியனுப்பி வைத்தனர்.