கேபிஆர் கலை கல்லூரியில் வினாடி வினா போட்டி

கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் கணிதவியல் துறை “QUIZ MANIA” எனும் தலைப்பில் இணையவழி வினாடி வினா நடைபெற்றது. நிகழ்விற்கு முதல்வர் பாலுசாமி தலைமையுரை வழங்கினார்.

இந்த இணையவழி வினாடி வினாவில் மேலாண்மைத் துறை மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். மூன்று சுற்றுக்களை கொண்டதாக அமைக்கப்பட்ட இதில் மூன்றாம் சுற்றில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்கள் முதல் பரிசு ஆர். பவித்ரா, இரண்டாம் பரிசு D. ஸ்ரீநவி, மூன்றாம் பரிசு V. கோபி நாத் மேலாண்மைத்துறை முதலாம் ஆண்டு மாணவர்கள் வெற்றி பெற்றனர்.

இதனை மாணவ ஒருங்கிணைப்பாளர்களாக முதலாம் ஆண்டு மாணவர்கள் லோகநாதன், ஹரிபிரசாத், தீனதயாளன் ஆகியோர் ஒருங்கிணைத்து சிறப்பு செய்தனர். மேலும், மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக நிகழ்விற்கு இணைப்பேராசிரியர் தலைவர் மேலாண்மைத்துறை வனிதா அவர்கள் நிகழ்வு ஒருங்கிணைந்து வழங்கினார்.

அனைத்து முதலாம் ஆண்டு மேலாண்மைத்துறை மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியியல் மேலாண்மைத்துறை உதவிப்பேராசிரியர்கள் ஹேமலதா, சுந்தரேசன், வாசுகி மாணவர்களுக்கு அறிவிப்புகளை நன்முறையில் எடுத்துக்கூறி நிகழ்வினை சிறப்புற வழங்கினார்.