மதவாத சக்திகளை வளர விடாமல் செய்ய வேண்டும் – உதயநிதி ஸ்டாலின்

மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் கோவை தெற்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மயூரா ஜெயகுமாரை ஆதரித்து திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தேர் நிலை திடல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் தொண்டர்கள் அனைவரும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிக்க வேண்டும். மதவாத சக்திகளை வளர விடாமல் செய்ய வேண்டும்.

முதல் முறையாக வேட்பாளராக போட்டியிடும் நான், இன்னும் எனது தொகுதியில் பிரச்சாரத்திற்கு போகவில்லை.

கலைஞருக்கும் மோடிக்குமான  இந்த தேர்தலில்   கலைஞரை ஜெயிக்க வைத்து காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.