திமுக சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் வேட்பு மனுத்தாக்கல்

கோவை சிங்காநல்லூர் தொகுதியில், திமுக சார்பில் இரண்டாவது முறையாக போட்டியிடும் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக்   கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலகத்தில் இன்று (17.3.2021) வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமாரிடம் கார்த்திக் வேட்பு மனுத்தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், திமுக மெகா கூட்டணி அமைத்து இருப்பதால் தேர்தலில் அபார வெற்றி பெறுமென தெரிவித்தார்.

மத்திய, மாநில அரசுகளினால் தொழில் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், மாநில அரசு இப்பகுதியில் மேம்பாலம், சாலை உள்ளிட்ட வசதிகளை   செய்து தரவில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.