பாஜக சார்பில் ஏழை மக்களுக்கான மருத்துவ முகாம்

கோவை: சசிகலா வருகை தமிழக அரசியலில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என பாஜக துணை தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

கோவையில் பாஜக சார்பில் ஏழை மக்களுக்கான மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இதில் அக்கடசியின் மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று துவக்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வருகிற சடடமன்ற தேர்தலுக்காக தமிழக அளவில் உள்ள பாஜகவின் முக்கிய தலைவர்கள் தற்போது பிரச்சாரத்தை துவங்கி உள்ளதாகவும், தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர் தேசிய அளவிலான முக்கிய தலைவர்கள் தமிழகம் வந்து பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் சசிகலா வருகையினால் பெரிய அளவிலான மாற்றம் வரும் என கூறமுடியாது எனவும், தேர்தல் நேரத்தில் புதிய புதிய கடைசி மற்றும் நபர்களின் வருகையால் எப்போதும் எந்த மாற்றம் ஏற்பட்டதில்லை எனவும் தெரிவித்தார்.