சினிமா ரசிகர்களுக்கு விருந்தாகும் புது பட வரவு

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக திரையரங்குகள் சில மாதங்களாக மூடப்பட்டு இருந்தன. இதனால் திரையரங்குகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு புதிய படங்கள்              ஒ டி டி தளங்களில் வெளியாகின. சில முன்னணி நடிகர்களுக்கு படங்களும் இத்தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றன. இந்நிலையில் முன்பு இருந்ததை விட கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 50 % இருக்கைக்கு மட்டும் அனுமதியளித்து திரையரங்குகள் திறக்கப்பட்டன.

இந்த வரிசையில் மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் பொங்கல் அன்று வெளியாகியது. விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்களுக்கு இடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருந்தது.  ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து நல்ல வரவேற்ப்பையும் பெற்றது. மேலும் உலக அளவில் அதிக வசூல் ஈட்டி சாதனையும் படைத்தது. தற்போது திரையரங்குகளில் மாஸ்டர், ஈஸ்வரன், களத்தில் சந்திப்போம், ட்ரிப் மற்றும் கபடதாரி படங்கள் வெளியாகி ஓடி கொண்டிருக்கின்றன.  இந்நிலையில் 100 % இருக்கைகளுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது.

2021 இல் திரையரங்குகளில் வெளிவரவுள்ள படங்கள் :

மணிரத்னம் இயக்கி, முன்னணி நடிகர்களான விக்ரம், கார்த்தி , ஜெயம் ரவி ,ஐஸ்வர்யா ராய் மற்றும் இன்னும் சில முன்னணி கதாபாத்திரங்கள் நடிக்கும்  பொன்னியின் செல்வன்  படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள்  நிறைவடைய உள்ள நிலையில்  தீபாவளிக்கு வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் இந்த படம் கல்கி எழுதிய  பிரபலமான நாவலை தழுவி எடுப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறது.

நெல்சன் தீலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் திரைப்படம் ஏப்ரல் 14 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான கர்ணன் படம் ஏப்ரல் 9இல் வெளிவரவுள்ளது.

ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று நான்கு மொழிகளில் வெளியான கே ஜி ஃப்  திரைப்படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம்   பாகம்  ஜூலை 16 இல் திரைக்கு வரவிருக்கிறது.

திரை உலகில் ரஜினியின் கடைசி திரைப்படமான அண்ணாத்த நவம்பர்  4  இல் வெளிவரவுள்ளது.

இதைத் தொடர்ந்து அஜித்தின் வலிமை மற்றும் நயன்தாராவின் நெற்றிக்கண் திரைப்படங்களும் படப்பிடிப்பு முடிந்து திரையரங்குகளில் எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா ரசிகர்களுக்கு   இந்த ஆண்டு  நல்ல திரை விருந்தாகவே  இருக்க போகிறது.