கோவையில் பல்வேறு இடங்களில் கனமழை

கோவை மவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் முன்பு 10நாட்கள் தொடர்ச்சியாக மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்தது. கடந்த இரண்டு நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில் இன்று காலை முதல் கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், பீளமேடு, துடியலூர், கவுண்டம்பாளையம், ராமநாதபுரம், குனியமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.