வரும் 3ம் தேதி “தமிழக நாயுடு பேரவையின் ஆலோசனை கூட்டம்”

கோவை: நாயுடு பேரவையின் மாவட்ட ஆலோசனை கூட்டம் வரும் ஜனவரி மாதம் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் மேட்டுப்பாளையம் சாலை ஜி.என். மில்ஸ் அருகே அமைந்துள்ள கந்தவேல் மஹாலில் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழக நாயுடு பேரவையின் கோவை மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் நாயுடு கூறும்போது:-தமிழக நாயுடு பேரவையானது கடந்த 2001ம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் நாயுடு, நாயக்கர் வகுப்பை சார்ந்த அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு மிகப்பெரிய அமைப்பாக உருவாக்கப்பட்டு வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் பல லட்சம் உறுப்பினர்கள் உள்ளார்கள். கோவையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு துவக்கப்பட்ட பேரவையில் மட்டும் சுமார் 15 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பேரவையின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகின்றது. தற்போது தமிழகம் முழுவதும் 35 மாவட்டங்களில் உறுப்பினர்கள் உள்ளனர். அந்தந்த மாவட்டங்களில் நிர்வாக பொறுப்பு அமைந்து நிர்வாகம் செயல்பட்டு வருகின்றது. தற்போது கோவை மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் மேற்கொண்ட முகவரியில் நடைபெறவுள்ளது. இதில் வரும் சட்டசபை தேர்தல் குறித்தும் நமது அரசியலமைப்பு ஆரம்பிப்பது குறித்தும் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அந்த முடிவை தமிழக நாயுடு பேரவையின் மாநிலத்தலைவர் குணசேகரன் நாயுடு சிறப்புரையாற்றுவார் என கோவை மாவட்டத் தலைவர் ஜெய்சங்கர் நாயுடு தனது அறிக்கயில் தெரிவித்தார்.