கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

அனைத்து கிறிஸ்தவ மக்கள் ஒருங்கிணைப்பு நல மையமும் லயன்ஸ் ஆப் கோயம்புத்தூர் நோபிள்ஸ் ஆர்ட்ஸ் இணைந்து கிறிஸ்துமஸ் குதுகல கொண்டாட்டம் என்ற தலைப்பில் கிறிஸ்துமஸ் விழா கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் உள்ள ரோட்டரி டெக்ஸ் சிட்டி ஹாலில் நிறுவனத் தலைவர் சி.எம்.ஸ்டீபன்ராஜ் தலைமையில் நடந்தது.

மாநில மகளிரணி தலைவி கரோலின் விமலாராணி, கெளரவ ஆலோசகர்கள் கணேசன், கனகராஜ், கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அணியின் தலைவர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரிமா சங்க ஆளுநர் கருணாநிதி, துணை ஆளுநர்கள் நடராஜன், ராம்குமார், செந்தில், கணேசன், பிரேம்குமார், ஆபிரகாம் மேத்யூ, வெங்கடேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், திராவிட முன்னேற்ற கழகத்தின் மாநில மகளிர் தொண்டரணியின் துணை செயலாளரும், ஆலம் அறக்கட்டளையின் தலைவருமான மீனா ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்பு செயலாளர் சுசி கலையரசன், திமுக தலைமை கழக பேச்சாளர் காட்டூர் சம்பத், அனைத்து மத சமூக நல்லிணக்க பேரவையின் மாநில அமைப்பாளர் கோவிந்தசாமி, ஆக்னஸ் பள்ளியின் தாளாளர் சுரேஷ், முத்தமிழ் காவலர் கார்பீல்ட், கோவை கிழக்கு மாவட்ட திமுக மகளிர் தொண்டரணியின் அமைப்பாளர் மேரி ராணி, மாணிக்கம், காங்கிரஸ் கட்சியின் உக்கடம் சர்க்கில் தலைவர் ஜேம்ஸ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

குருத்துவ ஆயர் நல மையத்தின் கோவை மாவட்ட போதகரணி தலைவர் சார்லஸ் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு செய்தி அளித்தார். விழாவில் மாற்றுத்திறனாளிகள் உட்பட ஏழை ,எளிய மக்கள் 200 பேருக்கு புத்தாடைகள், ஹாட் பாக்ஸ்கள் வழங்கப்பட்து. முன்னதாக ஜீவன் துதி ஆராதனை மில்டனின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.