‘உள்ளங்கையில் 50 வானம்’ நூல் வெளியிட்டு விழா

கோவை: ழகரம் வெளியீடு கொண்டாடும் கவிதை பெண்கள் திருவிழா நிகழ்வு அண்ணா சிலை அருகில் அர்த்ரா அரங்கில் நடைபெற்றது. இதில் 50 பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பு நூலான ‘உள்ளங்கையில் 50 வானம்’ என்ற நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசு நூலினை வெளியிட வானம்பாடிக்கவிஞர் புவியரசு பெற்றுக்கொண்டார்.

பின்னர் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி எழுதிய கண்ணதாசன் எனும் கடல், ஆதார் அட்டை இல்லாத கடவுள், கவிஞர் கோபாலகிருஷ்ணன் எழுதிய புதிய பூஞ்சோலை, நூறு பொற்காசுகள், செல்லம்மாள் எழுதிய திருநெல்வேலி சுவைமிகு சமையல் மற்றும் எழுத்தாளர் அகிலா எழுதிய புதினம் தவ்வை, இங்கிலாந்தில் 100 நாட்கள் என்ற நூல்களும் வெளியிடப்பட்டது.

இந்நிகழ்வில் பி.எஸ்.ஆர் வணிக குழுமத்தின் தலைவர் பி.எஸ்.ரங்கசாமி, ழகரம் வெளியீட்டின் தலைவர் இரமணி, மீனாட்சி விநாயகம்(சென்னை சில்க்ஸ் வணிக குழுமம்) ஆகியோர் கலந்துகொண்டனர்.