உக்கடம் குளம் புணரமைக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளார் ஆய்வு!

கோவையில் சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பொpய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ் -1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டிலும் குளத்தினை புணரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. குளத்தை சுற்றிலும் உள்ள கரைகளை பலப்படுத்தும் பணிகள் முடிந்து, இவற்றில் இயற்கை முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், மிதிவண்டி பாதை, பூங்காக்கள், சிற்றுண்டி உணவகம், மிதக்கும் நடைபாதைகள் அமைப்பதற்கான பணிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டு தளங்கள், பாதசரிகள் பாதை அமைத்தல், வண்ண விளக்குகள், நீர்வழிப்பாதை மேம்படுத்துதல், குளத்திலுள்ள ஆகாயத்தாமரை அப்புறப்படுத்துதல் ஆகிய பணிகள் நடைபெற்றுவருவதை  குளத்தை சுற்றி சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்தே சென்று குளத்தை பார்வையிட்டார் ஆணையாளர். தொடர்ந்து, இப்பணிகளை தொய்வின்றி விரைந்து முடிக்குமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தினார்கள்.