சி.எஸ்.இ.இ.டி பயிற்சித் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம்

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் வணிகவியல் துறையும், ஈஸ்வர் அகாடமியும் இணைந்து ப்ரொபஷ்னல் கோச்சிங் விங் (PROFESSIONAL COACHING WING) மூலம் நடத்திய தேசிய மாணவர்களுக்கான சி.எஸ்.இ.இ.டி (CSEET)  தேர்வுக்கான பயிற்சி வழங்கப்பட்டது. அதன் முதல் கட்ட பயிற்சித் தேர்வில் வெற்றி பெற்ற வணிகவியல் துறை மாணவர்கள் அகல்யா தர்ஷினி, லோக நிதீஸ்வரன், ஹரிணி, சஞ்சய், தன்வர்ஷினி, ஹரிப்ரியா ஆகியோர்களுக்கு கேடயமும் பதக்கமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி மற்றும் சிறப்பு விருந்தினர் கே.ஜி.ஐ.எஸ்.எல் (KGISL) குழுமத்தின் நிதி மற்றும் உள்கட்டமைப்பு துறையின் துணைத் தலைவர் மகேஸ்வரன் ராஜகோபால் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றிப் பெற்ற மாணவர்களை வாழ்த்தினார்.