ஆன்லைன் பாட்டுப் போட்டி: சிறப்புப் பரிசு வென்ற இந்துஸ்தான் பேராசிரியர்

கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் பிரபு, தி சென் அகாதெமி இணைய வழியில் நடத்திய பன்னாட்டு அளவிலான ‘சென் ஆன்லைன் சிங்கர்’ பாடல் போட்டியில் சிறந்த இறுதிப் போட்டியாளருக்கான விருது பெற்றார். இப்போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற பேராசிரியரை இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் தலைவர் கண்ணையன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கல்லூரி செயலர் பிரியா சதீஷ்பிரபு, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, மொழித் துறைத் தலைவர் இரமேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.