பூப்பந்து: முதல் பரிசு வென்ற ராமகிருஷ்ணா பள்ளி மாணவி

ஆந்திரபிரதேச நெல்லூரில் நடத்தப்பட்ட 64வது ஸ்கூல் கேம் பெடெரேஷன் ஆஃப் இந்தியா (School Games Federation of India) 2018-19 ஆம் ஆண்டு தேசிய அளவிலான 14 வயதுக்குப்பட்ட பூப்பந்து விளையாட்டுப் போட்டிகளில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி சௌபர்ணிகா முதல் பரிசை தமிழ்நாடு அணி சார்பாக வென்றார். இவருக்கு தமிழக அரசு ரூ. 2 லட்சத்திற்கான காசோலை கொடுத்து கெளரவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசாமி, மற்றும் அறங்காவலர், முதல்வர் ரவி, உடற்கல்வி ஆசிரியர் சரவணக்குமார் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.